திருப்பூர், செப். 27 – திருப்பூரில் நிலுவை ஊதியம் கோரி வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் கள் கொட்டும் மழைக்கு இடையே கோபாவேச ஆர்ப்பாட்டம் செய்த னர். இதில் சிஐடியு, வாலிபர், மாதர் சங்கத்தினர் பங்கேற்று இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர். சுமார் 9 மாத கால சம்பளம் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் வியாழக் கிழமை முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதன்படி முழுமை யாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இரண்டாம் நாளான வெள்ளியன்றும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடை பெற்றது. திருப்பூரில் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாலை மெயின் தொலை பேசி நிலையம் முன்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாநிலக்குழு உறுப் பினர் ஜி.சம்பத், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா ஆகியோர் ஆதரவு தெரிவித்து உரையாற்றி னர். கொட்டும் மழைக்கு இடையில் இந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் சி.வி னோத்குமார் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார். இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண் டனர். தோழமை சங்கத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.