tamilnadu

அவிநாசி ,திருப்பூர் , தாராபுரம் முக்கிய செய்திகள்

மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறப்பு

அவிநாசி, ஜூலை 31- அவிநாசி  புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பல்பொருள் அங்காடி பின்புறமாக டாஸ்மாக் கடை  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் தர்ணா போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலனில்லாமல் தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.  அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறமாக பல ஆண்டுகளாக செயல் பட்டு வந்த டாஸ்மாக் கடை தற்போது தனி யார் பல் பொருள் அங்காடி பின்புறமாக பொது மக்கள் எதிர்ப்பை மீறி திங்களன்று  திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனி யார் பல்பொருள் அங்காடி பின்புறமாக முன்பே ஒரு டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. அத்துடன் மீண்டும் அதன் அருகில் மற்றொரு டாஸ்மாக் அமைப்பது பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படும் என மனு அளித்தோம். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் மக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை செயல்படாது என உறுதி யளித்தார். ஆனால் டாஸ்மாக் கடையின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டி ருந்தது. இதனால் சென்ற சனியன்று (ஜூலை 27) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் வட்டாட்சியர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே  பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் திங்களன்று டாஸ்மாக் கடை திறந்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளிகள் முகாமில்  259 பேர் கோரிக்கை மனு 

 திருப்பூர், ஜூலை 31 - திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பு  குறைதீர்க்கும் நாள் கூட்டம்  செவ்வாயன்று மாவட்ட  ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர்  கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளி களிடமிருந்து மாதாந்திர உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள், வீட்டுமனை பட்டா  மற்றும்  வேலைவாய்ப்பு  உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக 259 மனுக்கள் பெறப்பட்டன. அவர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன்  மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர் புடைய அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தினார். இக் கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம்  மதிப்பிலான சக்கர நாற்காலியினையும், 6 பயனாளி களுக்கு தலா ரூ.500 மதிப்பில் ஊன்று கோல்களும்  என 9 பயனாளிகளுக்கு ரூ.23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார். இதில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் விமல்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர்  உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் சட்ட    விழிப்புணர்வு முகாம்

தாராபுரம், ஜூலை 31 - தாராபுரத்தில் சட்டப் பணிகள் குழு சார்பில் தாரா புரம் கிளைச் சிறைச் சாலையில் சட்ட விழிப் புணர்வு முகாம் நீதி மன்ற  நடுவர் சசிக்குமார் தலை மையில் நடைபெற்றது.  முகாமில் தாராபுரம் கிளைச்  சிறைச் சாலை கண்காணிப் பாளர் விஜயகுமார் முன் னிலை வகித்தார்.  இந்த முகாமில் கைதி களுக்கு பிணையில் வெளி வருவதற்கான வழிமுறை கள், குற்றத்தை உணர்ந்து  தன்னை திருத்தி கொள் வதற்கான வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கைதிகளின் சந்தே கங்களுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது. 

விலையில்லா ஆடு, கறவை பசு வழங்க சிறப்பு கிராமசபை கூட்டம்

திருப்பூர், ஜூலை 31 – திருப்பூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தாருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கு வதற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி (இன்று) கிராம  அளவிலான குழுக் கூட்டம் நடத்தப் படுகிறது. இதைத் தொடர்ந்து முதல் சிறப்பு கிராம சபை கூட்டம் ஆகஸ்ட் 2 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும். பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யும் இரண்டாவது சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய  நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் துள்ளார்.  தகுதியுடைய பயனாளிகள் ஆக.2 ஆம் தேதி கிராமசபைக் கூட்டத்தில் விண்ணப்பங்கள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விலையில்லா வெள் ளாடுகள் குப்பம்பாளையம், நடுவச்சேரி, மூங்கில்தொழுவு, பண்ணகிணறு, எலைய முத்தூர், பெரியபட்டி, பூளவாடி, மருதூர்,  எரசினம்பட்டி, ஊத்துக்குளி கவுண்டம் பாளையம், புஞ்சை தாமரைக்குளம், மோளரப்பட்டி, உடுமலை கணபதி பாளையம், கவுத்தம்பாளையம், முத்தயம் பட்டி, கருவப்பநாயக்கனூர், கொமர கவுண்டன்பாளையம், உடுமலை ஜல்லி பட்டி, ஊத்துக்குளி கூனம்பட்டி, ஜிலோப்ப நாயக்கன்பாளையம், ஊத்துக்குளி குறிச்சி, அவிநாசி பழங்கரை, தாராபுரம் மணக் கடவு, கோட்டமங்கலம் ஆகிய 24 கிராம  ஊராட்சிகளில் மொத்தம் 4222 பய னாளிகள் தேர்வு செய்யப்படுவர். அதே போல் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தில்  குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துக்கிணத்துப்பட்டி, கொச வம்பாளையம், புதுப்பாளையம், வாகைத் தொழுவு, புக்குளம், வடுகப்பாளையம், கோட்டமங்கலம், சோமவாரப்பட்டி ஆகிய எட்டு ஊராட்சிகளில் 400 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர், ஜூலை 31- மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய  மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப் பட்டால் தற்போதுள்ள மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால் அந்த மசோதாவை திரும்ப பெறக் கோரி திருப்பூரில் மருத்துவர்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்கில மருத்துவம் பெருமளவில் பாதிக் கக்கூடிய அந்த மசோதாவை திரும்ப பெற  வேண்டும் எனவும், மாணவர்களின் மருத்துவக்கனவை கலைக்க கூடிய நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்கிளை சார்பில் 150 க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் 600க்கும் மேற்பட்ட மருத்து வர்கள் இந்த வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டதாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.