கோவை, ஜூலை 23 – தமிழக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டம் முழுவதும் செவ்வாயன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவருமான சுப்ர மணியம் பணி நிறைவு பெறும் நாளில் பழிவாங்கும் நடவடிக்கை யாக தற்காலிக பணி நீக்கம் செய் யப்பட்டார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் 146 பேர் மீது போடப்பட்டுள்ள 17பி பிரிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளர்ச்சி துறை அலு வலர் சங்கத்தின் சார்பில் ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் செவ்வா யன்று கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையில் ஒரு நாள் பணி களைப் புறக்கணித்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 282 ஊராட்சிகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் களும் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து வரும் 26ம் தேதி தென்காசியில் நடைபெறும் சங்க மாநாட்டில் முடிவு செய்யப்படும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தெரி வித்தனர்.