கோவை, மார்ச். 2- கோவை நொய்யல் ஆற்றின் துவக்கமான செம்மேடு, கூடுதுறை, முள்ளங்காடு, அம்மன் கோயில் வனப்பகுதி, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் டிராக்டர், மாட்டு வண்டி மூலமாக தினமும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. சாக்கு மூட்டைகளில் மணல் கட்டி வைத்து புதர் காடு வழியாக கழுதைகளை பயன்படுத்தி மணலை அள்ளி ராக்டரில் கடத்தி வருகின்ற னர். சிலர் ஆற்றுக்குள் வாகனத்தை நிறுத்தி மணல் தினமும் சுமார் 100 முதல் 150 டன் மணல் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சித்திரை சாவடி அணைக்கட்டுப் பகுதி யில் 10 அடி உயரத்திற்கு மணல் தேக்கம் இருந்தது. கடந்த 3 மாதத்தில் 8 அடி வரையில் இருந்த மணல் தேக்கம் காணா மல் போய்விட்டது. போளுவாம்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு உள்ளிட்ட பகுதியில் ஒரு டிராக்டர் கடத்தல் மணல் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இரவு பகலாக மணல் கடத்தல் நடந்தா லும் போலீசாரும், கனிமவளத்துறையினரும், வருவாய்த்து றையினரும் கண்டுகொள்வதில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ‘‘ மணல் கடத்தல் வாகனங்களை பிடித்து கொடுத்தால் போலீசார், வருவாய்த்துறையினர் விட்டு விடுகின்ற னர். எனவே பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தொண்டா முத்தூர் ரோடு சந்திப்பு, செம்மேடு, சித்திரை சாவடி அணை உட்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் அருகே கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு வாகனங்களை கண்காணித்து ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.