tamilnadu

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்னெண்னை கேனுடன் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு

கோவை, செப்.30– கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்னெண்னை கேனுடன் பெண் ஒருவர் மனு அளிக்க வந்தவரால் திங்களன்று பரபரப்பு ஏற் பட்டது.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு தரப்பட்டவர்களும் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத் திற்கு முன்பு கந்துவட்டி கும்பலின் தொல்லை தாங்காமல் குடும்பத்தோடு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்னெண்னை ஊற்றி தீகுளித்து இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளன்று தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் மண் னெண்ணை கேனுடன் வந்தது அதிர்ச்சி ஏற்படுத் தியது. இதனையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை அடுத்த அன்னூர் ஆலங்குட்டை பகு தியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி வசந்தா. மகன் மற்றும் மகளுடன் இவர்கள் வசித்து வருகின்றனர். முருகேசன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பணத்தேவை காரணமாக வசந்தா தனது நகைகளை அதே பகுதியை சேர்ந்த விஜய குமார் என்பவர் மூலமாக கடந்த 2017 ஆம் ஆண்டு வங்கியில்17 சவரன் நகைகளை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுள்ளர். அதனை வசந்தா வட்டியும் முதலுமாக கொடுத்து விட்ட பிறகு நகைகளை திரும்ப தருமாறு விஜய குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், விஜயகுமார் நகைகளை தனது பெயரில் வங்கியில் அடமானம் வைத்துவிட்டு நகைகளை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து நகைகளை திரும்ப கேட்ட வசந்தா மீது அவதூறு தகவல்களை பரப்பியதோடு அவரது குடும்பத்தினரையும் தனது செல்வாக்கால் ஊரை விட்டு விலக்கி வைத்ததாக விஜயகுமார் மீது வசந்தா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனு அளிக்க வசந்தா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அவரது பையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில், மண்ணெண்ணெயை அவர் மறைத்து வைத்திருந்ததை பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் துறையினர் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்த னர். இதையடுத்து தற்கொலை முயற்சி யோசனை யுடன் வந்த வசந்தாவை சாந்தப்படுத்திய காவ லர்கள், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த னர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயி லில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.