tamilnadu

img

சாரதா சிட்பண்ட் முறைகேடு

மம்தாவுக்கு நெருக்கடி

புதுதில்லி, மே 17-நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள்காவல் ஆணையர் ராஜீவ் குமாரைவிசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இதன்மூலம் விலக்கப்பட்டிருப்பது மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்தே தடை விலக்கப்பட்டுள்ளது. சாரதா சிட்பண்டு மோசடி வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் வழக்கை திசைதிருப்ப முயன்றதாக சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ராஜீவ் குமார் அதன்மூலம் ஆதாயம்அடைந்துள்ளார் எனவும், எனவே,அவரை கைது செய்து விசாரிக்கநீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அதன் மீது விதிக்கப் பட்டிருந்த தடையை தற்போது நீதி மன்றம் விலக்கியுள்ளது. சிபிஐ சட்டபூர்வமாக செயல்படலாம். ஆனால் கைது செய்து விசாரிப்பதற்கான அனுமதியாக கருத வேண்டியதில்லை என நீதிபதி சஞ்சீவ் கன்னா தெளிவு படுத்தியுள்ளார். தடை நீக்கப்பட்ட உத்தரவு 7 நாட்களுக்கு பிறகே அமலாகும். அதற்குள் ராஜீவ் குமார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால், உயர்நீதிமன்றம் உட்பட மேற்குவங்க மாநிலம் முழுவதும் நீதிமன்றங்கள் கடந்த 2 வாரங்களாக வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக திறக்கப்படவில்லை. ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்யக் கூடாது எனவும், அதே நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இந்த ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரிய ராஜீவ் குமாரை பொது தேர்தலுக்கு முன்பு கைது செய்ய சிபிஐ முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.