tamilnadu

img

நிலவேம்பு கசாயம் வழங்கல்

உதகை, நவ 22- பந்தலூரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் அப்பகுதி மக்களுக்கு நில வேம்பு கசாயம் விநி யோகிகப்பட்டது. உதகையை அடுத்த பந்தலூரில் அரசு மருத்துவமனை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் நெல்லியாளம் நகராட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் விநியோகிகப் பட்டது. இதன்படி பந்தலூர் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம் பப்பள்ளி, புனித சேவியர் ஆரம்பப்பள்ளி, டியூஸ் மேல் நிலைப்பள்ளி, பொன்னானி பழங்குடியினர் மற்றும் பந்தலூர் பஜார் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு கசா யம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை சித்த மருத் துவ அலுவலர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார். இதில் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேருக்கு கசாயம் வழங்கப்பட்டது.