கோவை, மே 17-சூலூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி சூறாவளிபிரச்சாரம் மேற்கொண்டார். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாரபில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து தொகுதியில் இருசக்கர பேரணி நடைபெற்றது. இருகூரில், துவங்கியபேரணியை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுதுவக்கி வைத்தார். உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி நடந்த இப்பேரணி பள்ளபாளையம், கண்ணம்பாளையம், இராவுத்தூர், இராசிபாளையம், மாதப்பூர், ராமாச்சிபாளையம், சோமனூர், சாமளாபுரம், செங்கத்துறை, காடாம்பாடி, காங்கேயம்பாளையம் ஆகிய ஊர்களின் வழியாக சூலூரை அடைந்தது. இந்த பேரணியில் திமுக துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், மாநகர்மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமுர்த்தி, கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், தபெதிக கு.ராமகிருட்டிணன்,ஆதிதமிழர் பேரவை மாநிலதலைவர் அதியமான், திமுகஒன்றிய செயலாளர்கள் தளபதிமுருகேசன், சி.என்.ராஜன்மற்றும் கூட்டணி கட்சியினர்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.