tamilnadu

img

கரும்புக்கான பாக்கி ரூ.25 கோடியை உடனே வழங்கிடுக கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.20- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கான மத்திய அரசு அறிவித்த (எப்.ஆர்.பி) விலை யில் பாக்கி ரூ.25 கோடியை உடனே வழங்க கோரி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயி கள் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சக்தி சர்க் கரை ஆலை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு கடந்த 5 மாதங்களாக பணம் தர வில்லை. இதனால் சுமார் 25 கோடி ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966 இன் படி மத்திய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலையை 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண் டும். ஆனால் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 140 நாட்களாக கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு தராமல் விவசாயிகளை அலைக் கழித்து வருகிறார்கள். இதனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய பயிர் கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்த முடியா மல், விவசாயிகள் அடுத்த பயிர்க் கடன் பெற முடியாமல் போகிறது. மேலும் சுகாதாரம், கல்வி, திரு மணம் உள்ளிட்ட செயல்பாடுக ளுக்கு பணம் இல்லாமல் கரும்பு விவசாயிகள் கூடுதல் வட்டிக்கு கடனை வாங்கி செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  இதே காலத்தில் பதிவு செய்யாத கரும்பை வெளியிலிருந்து புரோக் கர்கள் மூலம் அரைக்கும் சக்தி ஆலை  நிர்வாகம், அவற்றிற்கு உண்டான பணத்தை உடனுக்குடன் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பதிவு செய்து கரும்பை அனுப்பிய விவ சாயிகளுக்கு பணத்தை கொடுக்கா மல் வஞ்சித்து வருகிறார்கள். கடந்த 2004 முதல் 2009 வரை காலத்திற்கு (5ஏ) லாப பங்கு தொகையை கேட்டு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கொடுத்த வழக்கில் சக்தி சர்க்கரை ஆலை லாப பங்கு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சட்டப்படி தரவேண்டிய பணத்தை தர  இயலாது என மேல்முறையீடு செய் துள்ளார். 

இப்படி விவசாயிகளுக்கு சட்டப்படியாகவும், நியாயமாகவும் தரவேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை தர மறுக்கும் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் (எப்.ஆர்.பி) தராமல் 25 கோடி பாக்கி வைத்துள்ளது. இத்தொ கையை உடனடியாக விவசாயிக ளுக்கு வழங்க வேண்டும் என  வலியுறுத்தி காஞ்சிக்கோயில் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இ.கே.துளசிமணி, கே.அவனாசியப்பன்  ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாநில நிர்வாகி டி.பி.கோபிநாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார்கள். இதேபோல புதுக்கரைப்புதூர் கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.இ. விவேகானந்தன் தலைமை வகித் தார். மாவட்ட நிர்வாகி வி.பி.கார்த்திகேயன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கோபி கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் நிர்வாகி கே.எம்.முத்துசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஏ.அய்யாவு, கே.வெங்கிடுசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். காசிபாளையம் கோட்ட அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகி கே.ராமசாமி தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் செ.நல்லாக் கவுண்டர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டம் முழுவ தும் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.