மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரக்குழுவின் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் முதல் தவணையாக 23 ஆண்டு சந்தாவிற்கான தொகையை கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தியிடம், வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் வழங்கினர். இதேபோல், கோவை சிங்கை நகரக்குழுவின் சார்பில் 40 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபனிடம் சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.