திருப்பூர், ஜூலை 23 - திருப்பூரில் அரசுப் பள்ளிகளில் மடிக்கணினி கொடுக்கப்படாத முன்னாள் மாணவர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 2017-18 ,2018-19 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இந் நிலையில் நடப்பாண்டு திருப்பூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அமைச் சர்கள் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடை பெற்றது. இந்த தகவல் பரவிய நிலையில் முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு பல்லடத்தில் அமைச்சரை முற்றுகையிட்டனர். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு மேல்நிலை வகுப்புகளில் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் முன்பாகத் திரண்டு தங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்தாண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்கு மடிக்கணினிகள் வழங் கப்பட்ட நிலையில் தங்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறை யினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். அத்துடன் வரு வாய்த் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் ஆங்காங்கே மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மாதத்திற்குள் முன்னாள் மாணவர் களுக்கு மடிக்கணினி வழங்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர். ஒரே நாளில் திருப்பூரில் மூன்று இடங்களில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத் தியது.