tamilnadu

img

கால்நடை மருத்துவ படிப்பில் மாநில அளவில் முதலிடம்

ஈரோடு, ஜூலை 29- கால்நடை மருத்துவ படிப்பிற்கான தர வரிசை யில் எஸ்டி பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற போதும், கலந்தாய்வுக்கு அழைப்பு வரவில்லை என மாணவர் ஈரோடு மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித் தார். ஈரோடு மாவட்டம், பர்கூர் மலை, சுண்டபோடு கிராமத்தை சேர்ந்தவர் உடுமுட்டு மகன் சந்திரன். பழங்குடியின மாணவரான இவர் கோபி, வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் வேளாண் செயல்பாடுகள் தொழில் பாடப்பிரிவில் பிளஸ் 2 படித்து 444 மதிப் பெண்கள் பெற்றார். வேளாண் பாடப்பிரிவில் சேர,  தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்துக்கும், கால்நடை  மருத்துவ படிப்புக்காக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்துக்கும் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வேளாண் பல்கலை கழக தொழில்  பாடப்பிரிவினருக்கான ஒட்டு மொத்த தர வரிசையில் 409ஆவது இடம் பெற்றார். ஆனால் இவருக்கு இடஒதுக் கீடு தர வரிசை எண் வழங்கவில்லை. வேளாண் பல்கலை  கழக தொழில் பாடப்பிரிவுக்கான ஒட்டு மொத்த தரவரிசை பட்டியலில், 146வது இடமும், இடஒதுக்கீட்டில் பழங்குடியி னர் பிரிவில் முதலிடமும் பெற்றார். ஆனால் வேளாண் பல்கலையில் கடந்த 12ஆம் தேதியும், கால்நடை மருத்துவ பல்கலையில் கடந்த 25ஆம் தேதியும் கலந்தாய்வு நடந்தும், இவருக்கு சேர்க்கைக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக தொழில் பாடப்பிரிவு மாணவர்களுக்கு வேளாண் பல்கலையில் 5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 5,220 ல் 44 இடங்கள் தொழில்  படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். அதுபோல், கால்நடை மருத்துவ படிப்பில், 360 இடங்களில், 18 மட்டுமே அளிக்கப்படும். இந்த, 18 இட ஒதுக்கீட்டில் இவர் முதலி டம் பெற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வனிடம், மாணவன் சந்திரன் அளித்த மனுவில் கூறுயி ருப்பதாவது, கால்நடை மருத்துவ பல்கலை தர வரிசை யில் பழங்குடியினர் பிரிவு ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற தால், இங்கு சேர்க்கை கிடைக்கும் என வேறு படிப்புக்கு  விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இதுவரை அழைப்பு வர வில்லை. இதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளேன். இட ஒதுக்கீடு முறையில், வேளாண்மை செயல்பாடுகள்  தொழிற்கல்வி படித்த மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகிறது. எனவே, பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு மற்றும் வேளாண் தொழில் பாடப்பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில், தலா, 50 சதவிகிதம் வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் வழங்க பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.