பொள்ளாச்சி, ஜூலை 30- பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணிக்கு ஆள்சேர்ப் பில் சமூக நீதிக்கு அநீதி ஏற்படுத்துவதைக் கண்டித்து பொள்ளாச்சியில் திங்களன்று ஸ்டேட் வங்கியை முற்றுகை யிட்டு மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழ கம்,விசிக , மதிமுக, தமுமுக, மமக மற்றும் மஜக நிர்வாகி கள் கைது செய்யப்பட்டனர். பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணி தேர்வில் தலித், பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு அநீதி விளைவிக் கும் விதமாக இருப்பதைக் கண்டித்து தபெதிக கழக வெளி யீட்டு செயலாளர் இரா.மனோகரன் தலைமையில் ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட விசிக மாவட்ட செய லாளர் ச.பிரபு, மதிமுக நகர செயலாளர் துரைபாய், மமக சார்பில் ஷேக் அப்துல்லா, மஜக முஸ்தபா, தமுமுக கபூர், முத்துபாய் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டனர்.