tamilnadu

திருவில்லிபுத்தூர் மற்றும் ஒடிசா முக்கிய செய்திகள்

சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், மே 30- சாதியைச் சொல்லி இழி வாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த பாரதீய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராதா கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாரதீய ஜனதா கட்சியின் திருவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றி யப் பொதுச் செயலாளராக இருப் பவர் சுரேஷ். இவர் கட்சி பணி சம்பந்தமாக ராஜபாளையத்தில் இருக்கும் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணனை கடந்த மே 20-ஆம் தேதி  சந்தித்துள்ளார். அவ ருடன் வடக்கு ஒன்றியத்  தலைவர் சண்முகசுந்தரம், ராமராஜ், வீர பாண்டி, மற்றும் மகளிரணியைச் சேர்ந்த ஐந்து பெண்களும் சென் றுள்ளனர். அப்போது மாவட்டத் தலைவர் சுரேஷை சாதியைச் சொல்லி திட்டியுள்ளார். அவரு டன் சென்றிருந்த பழனி செல் வத்தின் செல்போனை அத்துமீறி பிடுங்கியதோடு கொலை மிரட் டல் விடுத்தார் இது தொடர்பாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதியு மறுத்துவிட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்த ரவின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆறுமுகசாமி பார தீய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளார்.

பேருந்து கவிழ்ந்து விபத்து புலம்பெயர் தொழிலாளர்கள் காயம்

ஒடிசா, மே 30- கேரளாவில் சிக்கித் தவித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் ஏழு பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 38 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து கொல்கத்தாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒடிசா மாவட்டம் பாலசூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பரில் வட சென்னை அனல் மின்நிலையம் திறப்பு

நாமக்கல், மே 30- வட சென்னை அனல் மின்நிலையம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தில் சாலை அமைக்கும் பணிக்கான துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:  வட சென்னை அனல் மின்நிலையம்  ஜூன் மாதம் திறப்பதாக இருந்தது. எனினும் ஊரடங்கு காரணமாக தாமதமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்த பின்னர்  டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும். இதன்மூலம் 800 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கும். மற்ற அனல் மின்நிலை யங்கள் 2023-2024 ஆம் ஆண்டில் முடிவடை யும். நீர்மின் திட்டங்களை பொறுத்தவரை கொல்லிமலை மற்றும் நீலகிரியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடைகாலத்தில் 17 ஆயிரம் மெகா வாட் மின் தேவை என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது, மின்நுகர்வு குறை வாகவே உள்ளது. இதன்படி நாளொன் றுக்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அந்த வகையில் 3 ஆயி ரம் மெகாவாட் மின் உற்பத்தி மிகுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விருதுநகரில்  கொரோனா  பாதிப்பு 129 ஆக உயர்வு

விருதுநகர், மே 30-  விருதுநகரில் உள்ள கூட்டு றவு நியாய விலைக் கடை மேலா ளர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதை யடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந் துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 127 ஆக இருந்தது. இந்நிலையில், விருதுநகர் கூட்டுறவு நியாய விலைக் கடை மேலாளரின் மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற் றுள்ளது. இதையடுத்து மணமக்  களை அவர், தனது உறவினர்களு டன் தனி வாகனத்தில்  சென்னை க்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு, விருதுநகருக்கு திரும்பி யுள்ளார்.  ஒரு சில நாட்களுக்குப் பின் னர் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  அரசு மருத்துவ மனைக்கு தனது மனைவியுடன் சென்று தன்னை பரிசோதிக் கும்படி தெரிவித்துள்ளார். இதில், இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர், விருதுநகர், மதுரை, அருப்புக் கோட்டை, சிவகாசி அரசு மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.