tamilnadu

ஒன்பது பேர் மட்டும் பயணித்த சிறப்பு ரயில்

கோவை, செப். 7 -   தேசிய பாதுகாப்பு அகா டமி மற்றும் கடற்படை அகா டமி தேர்வு எழுதபவர்க ளுக்கு கோவை - சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயி லில் கோவையிலிருந்து 9 பேர் மட்டும் பயணம் செய் துள்ளனர், என தகவல் வெளியாகியுள்ளது. கோவையிலிருந்து பய ணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நி லையில், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற் படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன் பதிவில்லா சிறப்பு ரயில், சனியன்று இரவு 9 மணிக்கு கோவை - சென்னை இடையே இயக்கப்பட்டது.

இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். அந்த 9 பய ணிகளுக்கும், கோவை ரயில் நிலையத்தில் கேம ராவுடன் இணைக்கப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப் பட்டு, பின்னர் அனுமதிக் கப்பட்டனர். இது குறித்து, தென்னக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், “கோவையில் இருந்து தேர்வு எழுத செல்வோர், அவர்களது பெற்றோர்கள் என 9 பேர் மட்டுமே பய ணம் செய்தனர். அவர்க ளுக்கு உரிய காய்ச்சல் பரி சோதனைகள் மேற்கொள் ளப்பட்டன. மேலும், முகக் கவசம் உள்ளிட்டவை அணிந்துள்ளனரா? எனவும் கண்காணிக்கப்பட்டனர்,” என்றார்.