tamilnadu

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக சிறப்பு இடஒதுக்கீடு

கோவை, ஜூலை 13- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயில சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில்103 மாண வர்களுக்கு பல்வேறு பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2019-20-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலமாக வெள்ளியன்று நடை பெற்றது. அதில், விளையாட்டு மாணவர்கள், மாற்றுத்திற னாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசு கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 5 விளை யாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 20 பேருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டதில், வெறும் 10 பேர் மட்டுமே  பங்கேற்றனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒரு இடத்திற்கு 4 பேருக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. இதில், 2 பேர் கலந்து கொண்டனர். இதேபோல், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக் கான பிரிவில் 13 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 20 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வெறும் 8 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதிகபட்சமாக ஒரு குறிப்பிட்ட தொழில் பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில் பிரிவில் 48 இடங்களும், 67 மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் 41 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், பட்டு வளர்ப்பு,  வேளாண் வணிக மேலாண்மை, உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களில் இடங்கள் காலியாகவே உள்ளன.