tamilnadu

img

தென்மேற்கு பருவக்காற்று காலம் ஓய்ந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது

கோவை, அக்.18- தமிழகத்தில் தென்மேற்கு பரு வக்காற்று காலம் ஓய்ந்த நிலை யில், காற்றாலைகள் மூலம் உற் பத்தி செய்யப்படும் மின்சார அளவு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, தொழிற்சாலை கள் பயன்பாட்டிற்கு உள்ளிட்ட அனைத்து விதமான மின் தேவை களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம் அனல்மின் நிலை யம், அணுமின் நிலையம், காற் றாலை மற்றும் நீர் மின் நிலையம் போன்ற மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் காற்றாலைகள் மூலம் 25 முதல் 28 சதவிகிதம் வரை தமிழகத்தின் மின் தேவை கள் பூர்த்தி செய்யப்பட்டு வரு கின்றன. பொதுவாக காற்றாலை கள் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் மாத இறுதி வரை அதிக உற்பத்தியை கொடுக் கும். தமிழகத்தை பொருத்தவரை யில், கன்னியாகுமரி முதல் கோவை வரை தென்மேற்கு மலைத்தொடரை ஒட்டிய பல  பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக பல்லடம், உடுமலை, கயத்தாறு, தேனி சுற்றுவட்டார பகுதிக ளில் அதிக அளவில் காற்றாலை கள் இயங்கி வருகின்றன.  அதன்படி, தமிழகத்தில் 8 ஆயி ரத்து 152 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி திறன் கொண்ட 13 ஆயிரம் காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்று சீசன் காலத்தில் (மே முதல் செப்டம்பவர் வரை) காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் காற்றாலைகள் 5 ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தியை எட்டின. தென் மேற்கு பருவக்காற்று காலம் முடிந்த நிலையில், தற்போது காற்றாலைகளால் உற்பத்தி செய்யப்படும் மின் அளவு வெகு வாக குறைந்துள்ளது.  இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தி சங்கத்தின் அகில இந்திய தலைவர் கஸ்தூரி ரங் கையன் கூறுகையில், தென் மேற்கு பருவக்காற்று சீசனில் காற்றாலைகள் மூலம் 100 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சீசன் முடிந்ததால் காற்றின் வேகம் குறைந்துவிட்டது. இத னால் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. தற் போது வடகிழக்கு பருவக்காற்று வீசுகிறது. இது வலுவில்லாத காற்று. இந்த காற்று காற்றாலை யின் மின் உற்பத்திக்கு பயன ளிக்காது. மழை பெய்யும்போது மட்டுமே இந்த காற்று காற்றா லைகளுக்கு சிறிய அளவில் பயன்கொடுக்கிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை காற்றாலை கள் இயங்குவதே அதிகம். இத னால் தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு 8 முதல் 10 மில்லி யன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. இனி அடுத்த தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தான் மின் உற்பத்தியை எதிர்பார்க்க முடியும் என்றார். -(ந.நி)

90 மில்லியன் யூனிட் குறைவு

தமிழகத்தில் கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை ஒவ்வொரு காற்றாலையின் மூலமும் நாளொன்றுக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகி வந்தது. ஆனால் சீசனின் போது ஒவ்வொரு காற்றாலையில் இருந்தும் அதிகபட்சமாக 5 ஆயிரம் யூனிட் வரை உற்பத்தியானது. தமிழக அளவில் காற்றாலைகள் மூலம் ஒரு நாளுக்கு 100 மில்லியன் யூனிட் உற்பத்தியாகி வந்த மின்சாரம் தற்போது 8 முதல் 10 மில்லியன் யூனிட்டாக அதாவது 90 மில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி குறைந்திருப்பது மின் பற்றாக்குறை உருவாகுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.