tamilnadu

img

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க

நாமக்கல், ஆக.22- எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அடிப் படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட சிறப்பு முகாம் சின்ன எலச்சிபாளையம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இம் முகாமில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலை மையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட் டுள்ளதாவது, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம், கழிப்பிட வசதி அமைக்க வேண்டும். காவல் நிலையம் பின் புறம் உள்ள நூலக கட்டிடம் புதிதாக கட்டித் தரப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டு களாக எலச்சிபாளையத்தில் இயங்கி வந்த 108 ஆம்புலன்சை மீண்டும் எலச்சி பாளையத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பழுதடைந்த தார்ச் சாலைகளை செப்பனிட வேண்டும். சீரான குடிநீர் விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அகரம் ஊராட்சி  சேவை மைய அலுவலகத்தை செயல் பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.  மேலும் செக்காங்காடு, தொரட்டி காடு, கணக்கன்காடு, சின்ன எலச்சி பாளையம், அகரம் பகுதிகளில் மயானம்  மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக் கப்பட வேண்டும். எலச்சிபாளையம் அரசு  மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக் கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.