திருப்பூர், ஜூலை 26- திருப்பூர் மாநகராட்சி 4 மற்றும் 7ஆவது வார்டு மக்களின் அத்தியா வசிய தேவைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த மனுக் கொடுக்கும் போராட்டம் அதிகாரிகள் இல்லாத நிலையில் காத்திருப்பு போராட்ட மாக மாறியது. முந்தைய செட்டிபாளையம் ஊராட்சியாக இருந்த தற்போதைய 4 மற்றும் 7ஆவது வார்டுக்கு உட் பட்ட பகுதிகளில் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும். மேட்டுப்பாளையம் குடிநீர் போதியளவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபி சிந்தன் நகர் பகுதியில் உள்ள ஓடையின் இரு புறமும் தடுப்புச் சுவர் அமைத்து கொடுக்க வேண்டும். அவிநாசி கவுண்டம்பாளையத்தில் உள்ள ஊரக மருந்தகத்தை படுக்கை வசதிகள் கூடிய தாய் சேய் நல விடுதி யாக தரம் உயர்த்திட வேண்டும். இந்த வார்டுகளில் குடிநீர், சாக் கடை, மின் விளக்கு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நிறை வேற்றித் தர வேண்டும். ஏஎஸ்எம் காலனி, டீச்சர்ஸ் காலனியில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்துப் பெற்ற மனுக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி யினர் முதலாவது மண்டல அலுவல கத்துக்கு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு ஒன்றிய செய லாளர் கே.பழனிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.காளியப்பன், பி.குருசாமி, கிளைச் செயலாளர்கள் என்.பால சுப்பிரமணி, ஆர்.காளீஸ்வரன், எஸ்.ராஜேஷ், என்.மனோகரன், கே.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற் றனர். பொது மக்கள் ஏராளமா னோர் திரண்டு வந்தனர். ஆனால் மண்டல அலுவல கத்தில் மனுக்களைப் பெற அதி காரிகள் இல்லாத காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் அங்கேயே காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மண்டல அதி காரிகள் விரைந்து வந்து மார்க் சிஸ்ட் கட்சியினரிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த் தையில் கூடிய விரைவில் இக் கோரிக்கை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து காத்தி ருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.