கோவை, டிச. 1– அமைச்சரின் அண்ணன் என்ப தற்காக அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதிப்பதும், அதனை செய்திக் குறிப்பாக கோவை மாநகராட்சி வெளியிடுவதும் சம்பந்தப்பட்ட துறைக்கே அவமானகரமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவில்லை. இதன்காரணமாக மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளிலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை. தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர் இல்லாத நிலை யில் தனிஅதிகாரிகள் அலுவலக அறையில் அமர்ந்து உத்தரவிடுவது எந்த வகையிலும் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவிற்கு பின்னால் உள் ளாட்சிதுறை அமைச்சரின் பணிகளை தீர்மானிப்பது, அவரது சகோதரார் அன்பரசன் கைக்கு போய்விட்டதாக பரவலாக மக்களால் பேசப்படுகிறது. அதிகாரிகள் மாற்றம், டென்டர் இறு திப்படுத்துவது, பொதுமக்கள் குறை களுக்கு உத்தரவிடுவது ஆகியவற்றை அன்பரசன் தயக்கமின்றி செய்கிறார். கோவை மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சத்தில் ஊறித்திளைப்பதால் அரசுத்துறையில் இல்லாத அன்பர சன் கட்டளைக்கெல்லாம் கீழ்ப் பணிந்து நடக்கிற காட்சிகளை மக்கள் அன்றாடம் பார்க்கிறார்கள். அரசின் நிர்வாகத்தில் அமைச் சரின் அண்ணன் என்பதால் அன்பர சன் உள்ளிட்ட ரத்த உறவுகள் தலையிடுவதையும், சர்வாதிகரத்தன மான இத்தகைய நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன் மையாக கண்டிக்கிறது. இந்த நிலை தொடருமானால் மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி வலுவான போராட்டத்தில் ஈடுபடும் என தெரி விக்கப்பட்டுள்ளது.