தாராபுரம், ஜூலை 19- தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரிகளின் அலட் சியத்தால், நீதிமன்ற ஸ்டாம்புக்கு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தாராபுரத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம், சார்பு நீதி மன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடு வர் நீதிமன்றம் என 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வரு கிறது. இந்த நீதிமன்றங்களில் பொதுமக்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்யவும், ஆவணங் கள் தாக்கல் செய்யவும், ஜாமீன் பெறவும் இதர நடை முறைகளுக்கு கோர்ட் ஸ்டாம்பு ஒட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இந்த நீதிமன்ற ஸ்டாம்புகள் சார்நிலை கருவூலத்தில் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தாராபுரத்தில் நீதிமன்ற ஸ்டாம்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத னால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வரும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பே மாவட்ட கருவூலத்திற்கு விண்ணப்பித்து போதிய அளவு நீதிமன்ற ஸ்டாம்புகளைப் பெற்றிருந்தால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சார்நிலை கருவூல அதிகாரிகள் உடனடியாக போதிய அளவு நீதிமன்ற ஸ்டாம்புகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.