tamilnadu

img

திருப்பூரில் இருந்து ஏழு புதிய பேருந்துகள் இயக்கம்

திருப்பூர், செப். 28 – திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஏழு புதிய பேருந்துகளை அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்தி கேயன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் – பொள்ளாச்சி, கோவை, பரமக்குடி, ஓம லூர் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 7 புறநகர்ப் பேருந்துகளை ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் அமைச் சர் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பழைய பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், கோவில்வழியில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரு கின்றன. மேலும், தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு 300 சிறப்புப் பேருந்துகள் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் குண சேகரன், விஜயகுமார், நடராஜன், தனியரசு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.