ஈரோடு, செப் 17- அரசு கேபிள் டி.வி., செட்டாப் பாக்ஸ் மூலமான சேவை குறைபாட்டால், வாடிக் கையாளர்களை திருப்திப்படுத்த முடியா மலும், தொழில் நடத்த முடியாமலும் சிரமப் படுவதாக கூறி, தமிழ்நாடு கேபிள் டி.வி., சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக இக்கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் ஜி.தாமேதரன் தலைமையில் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்து கிறது. ஆனால், அவை தாராளமாக கிடைப் பதில்லை. இணைப்பு வழங்கப்பட்ட அரசு செட்டாப் பாக்ஸ்களில், அரசு தெரிவிப் பது போன்ற சேனல்கள், மக்கள் பார்க்கும் சேனல்கள் கிடைக்காததால், வாடிக்கை யாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும், அரசு செட்டாப் பாக்ஸ் ஒளிபரப்பு தடைபட்டால், அதுபற்றி தகவல் தெரிவித் தாலும், உடனடியாக சரி செய்வதில்லை. யாரிடம் புகார் செய்வது என்ற குழப்பம் தொடர்கிறது. மண்டல மேலாளரிடம் தெரி வித்தாலும், குறைகள் தீர்வதில்லை. ஆகவே, எங்களது தொழிலை காப் பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இதேபோல், அரசு செட்டாப் பாக்ஸ் மூலமாக 90 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி., யுடன் சேர்த்து 154 ரூபாய் கட்டணமாக பெற அரசு அறிவித்தது. ஆனால், அதற் கான சேனல் கிடைப்பதில்லை என்பது டன், எங்களுக்கான கமிஷன் விபரத்தை அரசு அறிவிக்கவில்லை. இதுதொடர் பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட் டுள்ளது.