தருமபுரி, ஜூன் 16- தருமபுரியில் சிப்காட் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு தருமபுரி மாவட்ட 11 வது மாநாடு தோழர் ஜி.சேகர் நினைவரங்கத்தில் (தருமபுரி வன்னியர் திருமணமண்டபத்தில்) சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன் தலைமை வகித் தார். மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.கலாவதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற் புக்குழு தலைவர் எம்.சுருளிநாதன் வரவேற்று பேசினார். மாநாட்டை மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஆறு முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செய லாளர் சி.நாகராசன், மாவட்ட பொருளாளர் சி.முரளி ஆகியோர் அறிக்கை முன்வைத்து பேசினர்.
தீர்மானங்கள்
தருமபுரி மாவட்டத்தில் வாழ் வாதாரத்திற்காக மக்கள், இளை ஞர்கள் வெளி மாவட்டங்களுக் கும், வெளி மாநிலங்களுக்கும் பிழைப்புதேடி செல்கின்றனர். எனவே தருமபுரி மாவட்ட மக்க ளின் குடிபெயர்தலை தவிர்க்க சிப்காட் அமைத்து மாவட்டத்தி லேயே வேலையாப்பை ஏற் படுத்த வேண்டும். காவிரி ஆற் றின் உபரிநீரை தருமபுரி மாவட் டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பி நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத் தில் பஞ்சாலைகள், கிராணைட், தீப்பெட்டி தயாரிப்பு, கார் மென்ட்ஸ், சேகோ ஆகிய சிறு, பெரு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆண்,பெண் தொழி லாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கிடைக்கவும், உச்சநீதி மன்ற ஆணைப்படி ரூ.18 ஆயி ரம் மாத ஊதியம் கிடைக்க தொழி லாளர் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பணிபுரி யும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு, பணி பாதுகாப்பு வழங்கவேண்டும். பணி ஓய்வுபெறும் துப்புரவு பணி யாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலையோர வியபாரிகளுக்கு இடம் ஒதுக்கி பணிபாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில், புதிய மாவட்ட தலைவராக ஜி.நாகரா ஜன், மாவட்ட செயலாளராக சி. நாகராசன், பொருளாளராக ஏ. தெய்வானை, துணைத் தலை வர்களாக பி.ஆறுமுகம், எம்.மாரி முத்து, ஜி.வெங்கட்ராமன், சி. முரளி, எம்.ராஜேந்திரன், சி.ராஜி, சி.ரகுபதி, ஆரோக்கியதாஸ், எம். ஈஸ்வரி, இணை செயலாளர்க ளாக சி.கலாவதி, எஸ்.சண்முகம், ஆர்.செல்வம், பி.ஜிவா, எம்.ரங்க நாதன், டி.லெனின், மகேந்தி ரன், எம்.லில்லிபுஷ்பம், பி.ஜெயக் குமார், கே.பெருமாள் உள்ளிட்ட 39 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன் நிறைவுறையாற்றினார். வரவேற் புக்குழு செயலாளர் ஏ.மாதேஸ்வ ரன் நன்றி கூறினார்.