tamilnadu

பள்ளி மாணவி வன்புணர்ச்சி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சேலம், நவ. 27- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே பள்ளி மாண வியை வன்புணர்ச்சி செய்த இளைஞர் போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே ஆட்டை யாம்பட்டியை சேர்ந்தவரின் 15 வயது மகள்  அருகில் உள்ள  அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இவரை,   ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் காட்டை சேர்ந்த  பழனிசாமி மகன் மோகன்ராஜ் (21) வன்புணர்ச்சி செய்துள்ளார்.  இதுகுறித்து பள்ளி மாணவியின் தந்தை ஆட்டை யாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து  மோகன்ராஜ்யை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை சேலம் அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.