tamilnadu

பள்ளி மாணவி தற்கொலை

தருமபுரி,டிச.19- தருமபுரி வட்டார வளர்ச்சி காலனி பகுதியை சேர்ந்தவர்  சக்தி. இவரது மகள் நந்தினி (15). இவர் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10  ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நந்தினி கடந்த டிச.9ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு மயங்கினார். அவரை மீட்ட குடும்பத்தினர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் வியாழனன்று சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தருமபுரி நகர காவல்  துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.