tamilnadu

img

திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் தீக்கதிர் நாளிதழ்

திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் தீக்கதிர் நாளிதழ் 10 ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.12 ஆயிரத்தை புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலிடம் வழங்கினார். உடன் கட்சிக் கிளைச் செயலாளர் எஸ்.தனபால், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எம்.கோவிந்தசாமி ஆகியோர் உள்ளனர். ஏற்கெனவே இவரது குடும்பத்தார் 2009ஆம் ஆண்டு 10 ஆண்டு தீக்கதிர் சந்தா ஒப்படைத்திருந்தனர். அதன் காலக்கெடு முடிவடையும் தறுவாயில் தற்போது மீண்டும் 10 ஆண்டு சந்தா தொகை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.