சேலம், ஜூலை 15- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனத்தின் 14 வது சம்மேளன மாநாடு நடை பெறுவதையொட்டி சேலம் சிறை தியாகிகள் நினைவாக ஜோதி பயணம் நிகழ்ச்சி சேலத்தில் துவங் கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு வரும் ஜூலை 21, 22,23 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதனையொட்டி தமிழகம் முழு வதும் 50க்கும் மேற்பட்ட ஜோதி பயணங்கள் புறப்பட்டு போக்கு வரத்து தொழிலாளர்களின் கோரிக் கைகளோடு மாநாட்டு திடலை நோக்கி செல்ல உள்ளது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் சிறைத்தியாகிகள் நினைவாக ஜோதி பயணம் புறப்ப டும் நிகழ்ச்சி சேலம் மத்திய சிறை முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஜோதி பயணத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் டி. உதயகுமார் துவக்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி சிறப்புரையாற்றினார். இந்த ஜோதி பயணம் மணக்காடு அரசு விரைவு போக்குவரத்து பணி மனை, ஜான்சன் பேட்டை, பள்ளப் பட்டி,வாழப்பாடி, தம்மம்பட்டி, ராசி புரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சம்மேளன நிர்வாகி டி. செல்வகுமார், சம்மேளன குழு உறுப்பினர்கள் பி. முருகேசன், என்.முருகேசன், துணை பொது செயலாளர் செந்தில் குமார், நாமக்கல் மாவட்ட தலை வர் பி.சிங்காரம் உள்ளிட்டு அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.