tamilnadu

சேலம், தருமபுரி முக்கிய செய்திகள்

 மூளை நரம்பு நோய்களுக்கான சிறப்பு கருத்தரங்கு

சேலம், செப்.15- மூளை நரம்பு நோய்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் சேலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  சேலம் நீரே பவுண்டேசன் சார்பில்  கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மருத்துவத்துறையில் மூளை  நரம்பியல் நோய்கள் குறித்து பல்வேறு விதமான உயிரி ழப்புகள் தடுத்து வருகின்றனர். மருத்துவ உலகில்  மூளை நரம்பியல் நோய்களுக்கு நவீன மருத்துவ வசதிகள்  சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள  மருத்துவர்களுக்கு உரிய ஆலோசனைகளும் கலந்துரை யாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் சேலம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம்  நீரே பவுண்டேஷன் மருத்துவமனை நீரே ரேடியாலஜி துறை, ஆஞ்சியோகிராம் துறையின் தலைவர் டாக்டர் எஸ். செந்தில் நாதன், சி. பிரபாகரன் மூளை  நரம்பியல் மருத்துவர் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. இதில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் மற்றும் பேராசிரியர் டிவி.தனபால் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.  மேலும் தற்போது உள்ள நரம்பியல் மற்றும் மூளையில்  ஏற்படும் நோய்கள் குறித்து உடனடியாக பொது மக்களுக்கு உரிய நவீன முறை மருத்துவத்தை தற்போது உள்ள சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள் ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சியும் நேரடியான அறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் விதமாக புகைப்படங்களும் வீடியோ நேரடி காட்சிகள் மூலமாக விளக்கமும் மருத்துவர்களின் சந்தே கங்களும் நிவர்த்தி செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை சேலம் நியூரோ பவுண்டேஷன் சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தருமபுரி அரசு மருத்துவமனையை  தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் பேட்டி

தருமபுரி, செப்.15- தருமபுரி அரசு மருத்துவனை, பேருந்து நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் பராமரிப்பு குறித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் புறநகர் மற்றும் நகரப்  பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறை களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர்   அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் புறநோயாளிகள், உள்நோ யாளிகள், அவசர சிகிச்சைப் பிரிவு களில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை மற்றும் சுகாதார பரா மரிப்பு குறித்து மருத்துவர்கள், நோயாளி களிடம் கேட்டறிந்தார். மேலும், உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்து பரிசோதனை செய்தார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது, தருமபுரி  நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து நிலை யத்தில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்தன.  கழிப்பறையில் உள்ள கதவுகள் மற்றும்  சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்ததாரிடம்  நகராட்சி நிர்வாகம் மூன்று மாத காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. அந்த அவகாசத்துக்கு பின்பும், கழிப்பறைகள் புதுப்பிக்கப்படவில்லை எனில், இ-டாய் லெட் முறையை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டதில் சுகாதாரம் மற்றும்  சிகிச்சை திருப்தி அளிக்கிறது. நோயாளி களுக்கு அளிக்கும் உணவும் நல்ல முறையில் வழங்கப்படுகிறது.சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருதயம் மருத்துவ பிரிவு துவக்கவேண்டும் என கேட்டிருந்தோம். இதற்கு நேர்முகத்தேர்வின் மூலம் இருதய பிரிவு பேராசிரியரை நியமித்துள்ளனர். மேலும் சிறுநீரக, நெப்ராலேஜி ஆகிய பிரிவுகளுக்கான மருத்துவம் துவக்கப்பட உள்ளது. அனைத்து வசதிகளும் இருக்க கூடிய மருத்துவமனையாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும்.  தருமபுரி-மொரப்பூர் ரயில்பாதை திட்டம் தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல நெக்குந்தி ராணுவ ஆராய்ச்சி மையத்துக்கு நிலம் கை யக்கப்படுத்தும் பணி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் மையம் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தெரி வித்தார்.