tamilnadu

சேலம் மற்றும் நாமக்கல் முக்கிய செய்திகள்

சேலம் உயிரியல் பூங்கா மூடல்

சேலம், டிச.4- சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வில் பாகனை, யானை மிதித்து கொன்ற  சம்பவத்தை தொடர்ந்து பூங்கா தற்காலி கமாக மூடப்பட்டுள்ளது.  மதுரை கள்ளழகர் கோவில் யானை யான ஆண்டாளுக்கு சுவாசக் கோளாறு ஏற் பட்டதன் காரணமாக கடந்த பத்து வருடங் களுக்கு முன்பு, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப் பட்டது. முன்னதாக, இந்த யானை மதுரை  அழகர் கோவிலில் 3 பேரை தாக்கிக் கொன்றது. இதனால் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இதற்கென தனி இடம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பத்மினி என்ற ஊழியரை தாக்கி கொன்றது.  இந்நிலையில் திங்களன்று, யானைக்கு சிகிச்சை அளிக்க முற்பட்ட கால்நடை மருத்துவரை யானை தீடீரென தாக்கியது. அப்போது, இவரை மீட்க முற்பட்ட பாகன்  காளியப்பன் என்பவரையும் தும்பிக்கை யால் தூக்கி எறிந்து மிதித்து கொன்றது. இந்த சம்பவம் அதிகாரிகள், பூங்கா ஊழியர் கள், சுற்றுலா பயணிகளை கடும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. தற்போது யானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. காளி யப்பனிடம் உதவி பாகனாக பணியாற்றிய பழனி என்பவர், தற்போது ஆண்டாள் யானையை பராமரித்து வருகிறார். இந்த  யானையை தொடர்ந்து இங்கு வைத்து பரா மரிக்க முடியாது. இதனால் உடனடியாக முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில், சேலம் வனக்கோட்டம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள ஆண்டாள் என்ற பெண் யானைக்கு தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உயிரியல் பூங்கா புதனன்று (4ம் தேதி) முதல், மறு உத்தரவு வரும் வரை  தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரி வித்துள்ளார். 

கனரக வாகன தொழிற்பேட்டை வளாகம்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல்,டிச.4-  திருச்செங்கோடு வட்டம் முசிறி கிரா மத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன  தொழிற்பேட்டை வளாகத்தினை மாவட்ட  ஆட்சியர் கா.மெகராஜ் கனரக வாகன  தொழில்முனைவோருடன் நேரில் சென்று  ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறி மற்றும் புத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கனரக வாகன தொழில்முனைவோருடன் நேரில் சென்று  ஆய்வு செய்தார். அப்போது, கனரக வாகன  தொழிற்பேட்டைக்கான மின்தேவைக் காக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார். மேலும் தொழிற் பேட்டை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு  வளர்க்குமாறு கனரக வாகன தொழில்முனைவோருக்குஅறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் மல்ல சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பருத்திப் பள்ளி, சமத்துவபுரத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு பாதுகாப்பான முறை யில் மூடப்பட்டுள்ளதை வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வில் , திருச்செங்கோடு வட் டாட்சியர் கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

தருமபுரி, டிச.4- தருமபுரியில் மணல் கடத்திய லாரியை வட்டாட் சியர் பறிமுதல் செய்துள் ளார்.  தருமபுரியை அடுத்த மகேந்திரமங்கலம் பகுதி யில் பாலக்கோடு வட்டாட் சியர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப் போது அந்த வழியாக வந்த  டிப்பர் லாரியை சோதனை  செய்ததில் அனுமதியில் லாமல் மணல் ஏற்றி வந்தது  தெரியவந்தது. இதனை யடுத்து, லாரியையும், 3  யூனிட் மணலையும் பறி முதல் செய்து மகேந்திர மங்கலம் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின் றனர்.

சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

இளம்பிள்ளை, டிச.4- இளம்பிள்ளை அருகே சுகாதார சீர்கேட்டை விளை விக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே ஆட்டை யாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட இடங்கள்  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும்  பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அதிகளவில் குவிந்து கிடக் கின்றன. மேலும் அவ்விடத்தில் பன்றிகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கும் கழிவுகள் குவிந்து கிடக்கும்  பகுதி களில் அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி, அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, சமுதாயக்கூடம், நூலகம், கோயில்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.  தற்பொழுது மழை பெய்து வருவதால் இங்கு கொட்டிக் கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசி வருகிறது. அப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையினரும்  அவ்விடத்தில் தூய்மைப்படுத்தி, குப்பைகள் தேங் காமல் இருக்க குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டிகள்  வைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேதமடைந்த சமூக நலக்கூடம்   சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இளம்பிள்ளை, டிச.4- இளம்பிள்ளை அருகே பேரூராட்சிக்குட்பட்ட திருமண மண்டபத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபம் இடங்கணசாலை குடோன் பகுதியில் உள்ளது.  குறைந்த கட்டணத்தில்  அனைத்து வசதியுடன் இம் மண்டபம் இருந்து வந்ததால் அப்பகுதியில் உள்ளவர்கள் இந்த திருமண மண்டபத்தை எடுத்து சுபநிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த திருமண மண்ட பத்தில் கட்டிடங்கள் பெயர்ந்தும், கண்ணாடிகள் உடைந்தும், பராமரிப்பில்லாமல் கிடப்பதால் இந்த பேரூ ராட்சி மண்டபத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை.  இந்த மண்டபத்தில் ஒரு சில நிகழ்ச்சிகள் நடை பெற்றாலும் அங்கு வரும் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும்  இல்லாமல் இருக்கின்றது. மேலும் படிக்கட்டு அருகே உள்ள பெரிய கண்ணாடி உடைந்து உள்ளதால் உயிர் பயத்துடனே மேல் மாடிக்கு சென்று வருகின்றனர். இதனை  பேரூராட்சி நிர்வாகம் மண்டபத்தை சீர்செய்து தந்தால், பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அப்பகுதி பொது மக்கள்   தெரிவித்துள்ளனர்.