மே,பாளையம், ஜூன் 24- இணையதள சிக்கலால் “3 ஜி” கையடக்க கருவிகள் பயனற்று போன தால், கிராமப்புற அஞ்சலக சேவை முடங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள கிராமப்புற அஞ்சலகங்களில் இணையதளம் மற்றும் சர்வர் பிரச்சனைகளாலும் வழங்கப்பட்டுள்ள “3 ஜி” கையடக்க கருவிகள் பயனற்று கிடக்கின்றன. இதனால் கிராப்புற அஞ்சல் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் மட்டுமல்லா மல் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற அஞ்சலகங்களிலும் இப்பிரச்சனை உள்ளதாக வேதனையுடன் தெரிவிக் கின்றனர் அஞ்சலக அலுவலர்கள். நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சலகங்கள் உள்ளன. இங்கு சிறுசேமிப்பு, தொடர் வைப்பு நிதி, செல்வ மகள் சேமிப்பு, தவணை வைப்பு தொகை, அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற திட்டங்களில் பணம் செலுத்துவது மற்றும் எடுப்பது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இந்த விபரங்கள் அனைத்தும் நகரில் உள்ள துணை தபால் நிலையங்களில் உள்ள கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் தினசரி பரிவர்த்தனை விபரங்களுடன் துணை தபால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் கூடுதல் பணிச்சுமை, நேர விரயம் ஏற்பட்டு கிராமப்புற வாடிக் கையாளர்களுக்கு அஞ்சல் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும் வகையில் கிராமப்புற அஞ்சலகங்க ளுக்கு மத்திய அரசு “தர்பன்” திட் டத்தை செயல்படுத்தியது. இதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு அனைத்து கிராம அஞ்சலகங்களுக்கும் கையடக்க மின்னணு கருவி வழங்கப்பட்டது. இதன் பின்னர் இக்கருவி மூலம் அனைத்து சேவைக்குரிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில நிமி டங்களில் நாட்டின் எந்த மூலைக்கும் பணம் அனுப்ப இயலும். மேலும் முதியோர் உதவி தொகை, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்ட பய னாளிகளுக்கும் கிராம அஞ்சலகங்க ளில் பணம் வழக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்சமயம் இக்கரு வியினை இயக்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 3 ஜி-அலைவரிசை யில் இயங்கும் இச்சேவையின் நெட்வொர்க் தற்போது கிராமப்புறங் களில் கிடைப்பதேயில்லை. அடிக்கடி சர்வர் பிரச்சனையும் தொடர்கிறது. இதுதவிர இக்கருவி பழுதடைந்தால் சரி செய்தும் கொடுப்பதில்லை என்பதால் பல்வேறு கிராமப்புற அஞ் சலகங்களில் இந்த கருவி பயன்பாடின் றியே கிடக்கின்றன. இதனால் பழைய முறையிலேயே பணிகள் நடைபெறு கின்றன. “4 ஜி” சேவை பயன்பாட்டிற்கு வந்து பல காலம் ஆகிவிட்டதோடு, அடுத்ததாக “5 ஜி” சேவை அறிமுகப் படுத்தப்படவுள்ள நிலையில் இன்ன மும் பழைய “2 ஜி” மற்றும் “3 ஜி” சேவையினையே தபால்துறை தொடர்கின்றது. இதனால் கிராமங்க ளில் உள்ளோர் பாதிக்கப்படுகின் றனர். குறிப்பாக முதியவர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி யுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு அஞ்சல் சேவை உடனுக்குடன் கிடைக்கும் வகையில், ஊழியர்களின் பணிச்சுமை யைக் குறைக்கவும் வழங்கப்பட்ட கருவிகள் செயலற்றும் போய் விட்டன. ஒரு சில இடங்களில் இதனை நள்ளி ரவு அல்லது அதிகாலை நேரங்கள் மட்டுமே “3 ஜி” இணைப்புக் கிடைப் பதால் அந்த நேரங்களில் காத்திருந்து பதிவு செய்யவேண்டியுள்ளது எனக் கூறும் அஞ்சலக ஊழியர்கள், இத னால் இதனை பயன்படுத்துவதே பெரும் சுமையாக உள்ளது என்கின்ற னர். மேலும், இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “கருவிகளின் குறை பாடுகள் குறித்து உயர் அதிகாரிக ளுக்கு முறைப்படி தகவல் கொடுத் துள்ளோம். கருவிகளை வழங்கிய நிறுவனமும், அவை பழுதானால் கண்டுகொள்வதில்லை. இப்பிரச் சனை மேட்டுப்பாளையம் வட்டத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ளது. விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப் பட்டு “4 ஜி” க்கு மாற வாய்ப்புள்ளது” என்றனர்.