tamilnadu

img

ரூகோஸ் ஈ: கட்டுப்படுத்த உடுமலையில் பயிற்சி

உடுமலை, பிப். 28- உடுமலை அருகே ரூகோஸ் எனப்படும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என வேளாண்மைத் துறை சார்பில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. உடுமலை வட்டம், தளியில் வேளாண்மைத் துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் தென்னை விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட தென்னை களுக்கு களைக்கொல்லி மற்றும் ராசாயன மருந்துக ளைக் கண்டிப்பாகத் தெளிக்கக்கூடாது. விளக்குப் பொறி ஏக்கருக்கு 2, மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஏக்கருக்கு 10, என்கார்சியா ஒட்டுண்ணி குளவி, கூட்டுப்புழு பருவத்தை உள்ளடக்கிய தென்னை ஓலைகள் 10, கிரைசோபிட் பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி முட்டைகள் ஏக்கருக்கு 300, சாமந்திப்பூ, சூரியகாந்தி, தட்டைப்பயிறு தென்னந்தோப்புகளில் பயிர்செய்து என்கார்சியா ஒட்டுண்ணி மற்றும் கிரைசோபிட் பல்கி பெருக செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கையாள்வதன் மூலம் விவசாயிகள் தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என பூச்சியியல்துறை உதவிப்பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார்.