tamilnadu

img

காவல் ஆய்வாளரை கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி கைது

மேட்டுப்பாளையம், மார்ச்.3- மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினரை கத்தி யால் தாக்கிவிட்டு தப்பிய ரவுடியை காவல் துறையினர் கைது செய்தனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்.எம் நகர்  பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (எ) சையத் இப்ரா ஹீம் (30).  இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு  வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர் மீதுள்ள பழைய  வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் காரணமாக சிட்டிபாபு (எ) சையத் இப்ரா ஹீமை ஞாயிறன்று இரவு கைது செய்ய போலீசார்  சென்றனர். அப்போது அந்த ரவுடியை பிடிக்க சென்ற  மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கள் பிரபாகரன், திலக் மற்றும் பிரபாகரன் ஆகி யோரை கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர்களை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளார்.  இதனையடுத்து தலைமறைவான சிட்டிபாபு (எ) சையத்  இப்ராஹீமை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில் திங்களன்று மாலை மேட்டுப்பாளையம் சாமண்ணா ஹவுஸ் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன் உட னடியாக அங்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல் துறை யினர் அவரை கைது செய்தனர்.  மேலும், தாக்குதலுக்கு உள்ளான உதவி ஆய்வாளர் திலக் கொடுத்த புகாரின் பேரில் சிட்டிபாபு (எ) சையத் இப்ராஹீம் மீது காவல் துறையினரை ஆயுதத்தால் தாக்கி யது, கொலை மிரட்டல் விடுத்தது, பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின்னர் கோவை குற்ற வியல் நீதிமன்ற உத்திரவின்படி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;