ஈரோடு, ஜூலை 10- ஈரோடு பொய்யேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள குடி யிருப்புகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, காந்திஜி சாலை அருகே அமைந்துள்ளது பொய்யேரிக்கரை. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், இப்பகுதி நீர்நிலை ஆக்கிர மிப்பின் கீழ் வருவதால் குடியிருப் புகளை அகற்ற வேண்டுமென ஈரோடு மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் புதனன்று காந்திஜி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த காவல்துறை அதி காரிகள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது, நீர் நிலை ஆக்கிரமிப்புகளாக இதே பெரும்பள்ளம் ஓடைக்கு உட்பட இடங்களில் பல அரசுக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இவைகளை அகற்றாமல், பொதுமக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து பட்டா வழங்கப்பட்ட இடத்தில் உள்ள வர்களை ஆக்கிரமிப்பு என அகற் றக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என காவல்துறை யினருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதன்பின் அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறை யினர் அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இந்த திடீர் மறி யல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.