மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஈரோடு,டிச 20- குடியுரிமை சட்டத் திருத் தத்தை திரும்பப் பெறக்கோரி ஆயிரக்கணக்கான இஸ்லாமி யர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப் புகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக்களை அளித்தனர். அம்மனுவில் கூறுப் பட்டுள்ளதாவது, மக்களவை மற் றும் மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை,இந்தியமுஸ் லிம்களின் குடி உரிமையை பாதிக்கின்ற வகையில் இருப்ப துடன், இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மத, இன பாகுபா டின்றி உரிமைகளைப் பறிக்கின்ற விதமாக அமைந்துள்ளது. இச்சட்டமானது இந்நாட்டின் பாரம்பரிய குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு பெரும் பான்மை பலத்தை கொண்டு இஸ்லாம் சமுதாயத்தின் உணர்ச்சி களையும், கடும் எதிர்ப்புகளை யும் சிறிதும் கண்டு கொள்ளாமல் அவற்றை தமிழக அரசு தொடர்ந்து ஆதரித்து கொண்டிருப்பது கண் டனத்துக்குரியதாகும். ஆகவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லா மிய இயக்கங்கள் சார்பில் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் இஸ்மாயில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட் டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண் டனர். இதில் மதசார்பற்ற நாட் டில் மதத்தின் அடிப்படையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், இதற்கு ஆதரவு அளித்த மாநில அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப் பினர்.