tamilnadu

img

தொழிற்சங்க உரிமையைப் பறித்து பழிவாங்குவதா?

சேலம், ஜூன் 14- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைப் பறித்து, சங்கம் அமைக்கும் தொழிலா ளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்த்து சேலத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத் தில் நடைபெற்ற ஊழியர் விரோத போக்கு  மற்றும் ஊழல் நடவடிக்கையை அம்ப லப்படுத்திய ஊழியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று சோவல் பெருநிறுவனம் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு எதிராகத் தொழி லாளர்களைப் பணிநீக்கம்செய்வது.  மேட்டூர் கெம்ப்ளாஸ்ட், திருபெரும்புதூர் அஸாகி கிளாஸ் இந்தியா லிமிடெட் போன்ற நிறுவனங்கள்  தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண் டித்து சிஐடியு சார்பில் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐ டியு சேலம் மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் டி. உதய குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். கே.தியாகராஜன், ஆர்.வெங்கடபதி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.