கோவை, டிச. 15 – ஏபிடி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெரும் எம்.அருணாசலத்திற்கு ஞாயிறன்று பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கோவையை தலைமையிடமாக கொண்டு ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஸ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. இந் நிறுவனம் சிஐடியு சங்கத் தொழிலாளர்களின் பேராதரவை பெற்ற சங்கமாக திகழ்க்கிறது. இச்சங்கத்தின் பொதுச்செயலாளராக பணி யாற்றியவர் எம்.அருணாச்சலம். முப் பதாண்டு காலத்திற்கும் மேலாக ஏபிடி நிறு வனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து இவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா கோவை மாவட்ட மில் தொழி லாளர் சங்கத்தில் நடைபெற்றது. ஏபிடி சிஐ டியு சங்கத்தின் தலைவர் ஆர்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, ஏபிடி சிஐடியு சங்க கௌரவ தலைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் எம்.அருணகிரிநாதன், ஐஎன்டியுசி ஏபிடி சங்க தலைவர் கே.என்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.