திருப்பூர், ஜூன் 10 - காங்கேயம் காவலர் குடியிருப்பு மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலுள்ள வழிபாட்டுத் தலத்தை அகற்றுமாறு திராவிடர் கழகம் சார்பில் காங்கேயம் துணைக் காவல் கண்காணிப் பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, இந்தியா மதச் சார்பற்ற நாடு, மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றங் களின் வாயிலாக பல தீர்ப்புரைகள் பெறப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை அவமதிக் கும் வகையில் காங்கேயம் காவலர் குடி யிருப்பு மற்றும் துணைக் கண்காணிப்பா ளர் அலுவலக வளாகத்தில் புதிய வண்ணப் பூச்சுகளுடன், வேலைப்பாடுகளுடன் மத வழிபாட்டுத்தலம் உருவாகியுள்ளது. இதற்கு விழா கொண்டாடும் விதமாக செம்புக் கலசம் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. இது அப்பட்டமான விதிமீறல். பக்தி என்பது தனிச்சொத்து. அவரவர் விரும்புகின்ற மத வழிபாடுகளை, தொடர் புடைய விழாக்களை அரசுக்குச் சொந்த மான இடங்களில் வைக்க சட்டத்தில் அனு மதி இல்லை. எனவே மேற்படி மதவழி பாட்டுத்தலத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அகற்றாத பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தி.க. காங்கேயம் நகரத் தலைவர் பெ.மணிவேலு உள்ளிட்ட நிர்வா கிகள் காங்கேயம் துணை காவல் கண்கா ணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.