திருப்பூர், ஜூன் 10 - திருப்பூர் மாநகராட்சி 51ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 51ஆவது வார்டுக்கு உட்பட்ட முனிசிபல் லே அவுட், தங்கா லே அவுட், திருவிக நகர், கோபால் நகர், அன்னமார் காலனி, குழி வளவு ஆகிய பகுதிகளில் முறை யாக சாக்கடைகளைச் சுத்தம் செய்யாத காரணத்தால் சமீபத்தில் பெய்த மழையின்போது மழைநீரு டன் சாக்கடை நீரும் கலந்து தெருக்களிலும், தாழ்வான பகுதி களிலுள்ள வீடுகளிலும் புகுந்து பொதுமக்களுக்கு பல்வேறு இன் னல்கள் ஏற்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. அத்து டன் தங்கா லே அவுட் 6ஆவது வீதியில் மரம் ஒன்று சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழக்கூடும் என்ற நிலை உள் ளது. இப்பகுதிகளில் தெரு விளக்கு கள் சரியாக எரிவதில்லை. இத னால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறு கின்றன. சாக்கடைத் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசு உற் பத்தி அதிகரிக்கிறது. எனவே இந்த வார்டுக்கு உட் பட்ட பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்து, கொசு மருந்து தெளித்து, தெரு விளக்குகளைச் சரி செய்து தர வேண்டும். விழும் நிலையிலுள்ள மரத்தை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் நூற்றுக் கணக்கானோர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவும் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
மழைநீரை வெளியேற்றிய புதிய லே அவுட்
திருப்பூர் 15ஆவது வார்டில் ஜவஹர் நகர் குடியிருப்புக்கு முன்பாக 7 ஏக்கரில் புதிய குடியி ருப்புக்கு லே அவுட் அமைக்கப்பட் டுள்ளது. அண்மையில் கனமழை பெய்தபோது, ஜவஹர் நகரை விட 5 அடி உயர்த்தி அமைக்கப் பட்ட இந்த லே அவுட்டில் இருந்து சுற்றுச்சுவரில் பெரிய ஓட்டை ஏற்படுத்தி சேறும், சகதியுமான மழைநீரை ஜவஹர் நகர் பகுதி யில் திறந்துவிட்டனர். இதனால் ஜவஹர் நகர் முழுவ தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இங்குள்ள சாக் கடை கொள்ளளவுக்கு மேலும், சாலையிலும் தேங்கி நின்று பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. புதிய லே அவுட்டில் நூற்றுக்கணக் கான வீடுகள் வரும்போது அங்கி ருந்து முறையானகழிவுநீர் வெளியேற்றும் ஏற்பாடுஇல்லா மல், இப்பகுதிக்குள் கழிவுநீர் வெளியேற்றப்பட்டால் பெரும் பாதிப்பும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படும். விதிமுறைப்படி கழிவு நீர்வெளியேற்ற ஏற்பாடு இல்லா மல் நகரமைப்புத் துறையினர் எப்படி அனுமதி கொடுத்தனர் என்ற கேள்வி எழுகிறது. எனவே இப்பகுதியில் கழிவு நீர் வெளியேறாமல் தடுத்து, லே அவுட் சுவற்றில் ஏற்படுத்தப் பட்டுள்ள பெரிய துளைகளை அடைத்து இப்பகுதி மக்கள் அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவஹர் நகர் குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் மருத்துவர் திருவேங் கடம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடனடியாக இதுகுறித்து கவ னம் செலுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆட்சியர் உத்தரவிட்டார்.
டாஸ்மாக்கை அகற்றிடுக
திருப்பூர் 24ஆவது வார்டு டிஎஸ்ஆர் லே அவுட் 4ஆவது வீதி யில் டாஸ்மாக் மதுபானக் கடை 1960 அமைந்துள்ளது. இதனால் பொது அமைதிக்கும், பாதுகாப் புக்கும் மிகுந்த அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளது. மதுப்பிரியர்கள் அவ்வழியே செல்வோரை கேலி, சில்மிஷம் செய்வதுடன் இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல் வது, கார் கண்ணாடியை உடைப் பது போன்ற காரியங்களில் ஈடு படுகிறார்கள். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத் திற்கு உடனடியாக மாற்ற வேண் டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.