சேலம், செப். 26- சேலம் கொலுசுக்கு புவிசார் குறியீடு வழங்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் ஐந்து ரோடு, குரங்கு சாவடி பகுதியில் புதனன்று வெள்ளி கொலுசு கண்காட்சி நடை பெற்றது. இந்த கண்காட்சியில் சேலம் கலைஞர் களால் உருவாக்கப்பட்ட ஜலர சலங்கை, ஒரு கிலோ எடை கொலுசு மற்றும் கைகளால் உருவாக்கப்பட்ட அன்கிட் கொலுசுகள், முகப்பு கொலுசுகள் ஆகியவை இடம் பெற்றன. குறிப்பாக 5 கிலோ எடையில் வெள்ளி கொலுசு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. இக்கண்காட்சியில் பெண்கள், குழந் தைகள் என திரளானோர் கலந்துகொண்டு கொலுசு களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து வெள்ளி வியாபாரிகள் கூறு கையில், இந்தியாவிலேயே சேலம் வெள்ளிக் கொலுசுக்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த சிறப்பு வாய்ந்த வெள்ளிக் கொலுசின் முக்கியத்தை பாது காக்க மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.