திருப்பூர், ஜூலை 1 - திருமுருகன் பூண்டியில் செயல்படும் சிற்பக் கூடங்களால் சுற்றுவட்டாரத்தில் காற்று மாசு, ஒலி மாசு ஏற்பட்டு மக்கள் சிரமப் படுவதால் அந்த சிற்பக் கூடங் களை இடமாற்றம் செய்யுமாறு அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக திங்களன்று அப்பகுதி மக்கள் சார்பில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: அவிநாசி வட்டம் திருமுரு கன் பூண்டி பகுதியில் கல் சிற்பக் கூடங்கள் பல உள்ளன. ஆரம்ப காலத்தில் உளி, சுத்தியல் கொண்டு சிற்பங்கள் வடிக்கப்பட்டன. ஆனால் தற்போது நவீன இயந் திரங்களைப் பயன்படுத்தி கற் களை அறுத்து சிற்பங்கள் செய் யப்படுகின்றன. இதனால் அப் பகுதி முழுவதும் கற்களில் இருந்து வரும் அடர்த்தியான தூசுப் படலம் காற்றில் பரவி புகை மண்டல மாக காட்சியளிக்கிறது. எவ்வித தடுப்பு நடவடிக்கையும் இல்லாத நிலையில், இதனால் காற்று மாசுபட்டு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சுவாசக் கோளாறுகளால் குழந்தை கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தூசுப் படலத்தால் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. கற் களை அறுக்கும் போது வரக்கூடிய இரைச்சல் சத்தம் காதை அடைப் பதுடன் தூங்க முடியாமல் இப்பகுதி மக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி செயல் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தையில், சிற்பக்கூடங்களுக்கு மாற்று இடம் கொடுத்தால் காலி செய்யத் தயா ராக இருப்பதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் காற்று மாசு அளவை செய்யும் கருவியைப் பொருத்திக் கணக்கிட்டுச் சென்றுள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர் தலை மையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் சிற்பச் சாலைகள் அனைத்தையும் அவி நாசி வட்டம் அ.குரும்பபாளையம் கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் நிலப் பரப்பில் அமைத்திடவும், அங்கு இடம் பதிவு செய்ய 9 மாத கால அவகாசம் வழங்கவும் சிற்பக்கூட உரிமையாளர்கள் உறுதிகூறினர். ஆனால் இந்த முடிவை நிறைவேற்று வதில் சிற்பக்கூட உரிமையாளர்கள் காலதாமதம் செய்கின்றனர். இத னால் அப்பகுதி மக்கள் வீடுகளைக் காலி செய்யும் நிலை ஏற்படு கிறது. மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு சிற்பக்கூடங்களை இட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக சார் ஆட்சியர் சிற்பக்கூட உரிமையாளர்களை அழைத்துப் பேசி உரிய நடவ டிக்கை எடுக்கும்படி ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட் டார்.