tamilnadu

தரைமட்ட பாலத்தை மேம்பாலமாக மாற்றுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நூதன போராட்ட அறிவிப்பு

நாமக்கல், நவ.26- நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யத்தில் திருமணிமுத்தாறு தரைமட்ட பாலத்தை மேம்பாலமாக மாற்ற வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடைபெறுமென அறிவித்துள்ளனர்.   நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட எலச்சிபாளையம், கொன்னையார் பேருந்து நிறுத்தம் அகரம்  வழியாக கொத்தம்பாளையத்தில் திருமணி முத்தாற்றில் தரைமட்ட பாலம் உள்ளது.  இந்த பாலத்தின் வழியாக கருமகவுண்டம் பாளையம், கோக்களை, பெரியமணலி, புள்ளாச்சிபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராம மக்கள்  செல்லக்கூடிய பிரதான சாலையாக கொத்தம்பாளையத்தில் தரை மட்ட பாலம் அமைந்துள்ளது. மழை காலங் களில் எலச்சிபாளையம் அரசு பள்ளிக்கு செல்வதற்கும், வெளியூர் வேலைக்கு செல் லக்கூடிய பொதுமக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மழை காலங்களில் இப்பகுதி மக்கள் தரைமட்ட பாலத்தை கடக்கும் போது கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. இதனால் மாற்று  5கி.மீ., சுற்றி வேறு பாதை வழியாக செல் கின்றனர். இதனால் தரைமட்ட பாலத்தை மேம்பாலமாக மாற்றுமாறு இருபது வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து தரைமட்ட பாலத்தை மேம்பாலம் மாற்றிட ரூ.3 கோடி 54 லட்சம் ஒதுக்கீடு  செய்யப்பட்டது. இதற்கான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். ஆனால் இதன்பின் னர் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சி பாளையம் ஒன்றியச் செய லாளர் சு.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, .கடந்த 20 வருடங் களாக இப்பகுதி பொதுமக்கள் தரைமட்ட பாலத்தை மேம்பாலமாக மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.  ஆனால் அரசு  நிர்வாகம் எவ்வித கவனம் செலுத்த வில்லை. சமீபத்தில் மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி மேம்பாலம் கட்டு வதற்கு ரூ 3 கோடி 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மேம்பாலத்திற்கான அடிக்கல் நட்டு பணியை துவங்கி வைத்தார்.  ஆனால் இதுவரை பணிகளை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டனர். மேலும் தரை மட்ட  பாலத்தின் அடியில் செல்லும்  குழாய் களில் மண் அடைத்திருப்பதால் குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் தரைமட்ட பாலத்தில் செல்வதால் மக்கள் கீழே விழு கின்றனர். எனவே தரைமட்ட பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும். இதை உடனடி நிறைவேற்ற வலியுறுத்தி வரும் (நவ.28) வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழுக்கி விழும் நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.