tamilnadu

img

அரசாணை 145ஐ திரும்ப பெறுக

சேலம், ஆக.30- அரசாணை 145ஐ திரும்ப பெற வலியு றுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளியன்று தாரமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் அரசாணை 145ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை 2019ஐ முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச    கோரிக்கைகளை வலியுறுத்தி  வெள்ளி யன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் வட்டார தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் கூட்டணியின் வட்டாரத் தலைவர் சிவகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு வட்டார இணைச் செய லாளர் செந்தில்குமார் முன்னிலை வகித் தார்.  மாவட்ட பொருளாளர் ரமேஷ், வட்டாரச் செயலாளர் சரவணன், வட்டார துணை தலைவர் வெற்றிச்செல்வம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். இறுதியில் வட்டார பொரு ளாளர் சி.சந்தோஷ்குமார் நன்றி கூறி னார். இதில் எண்ணற்ற ஆசிரியர்கள்  பங்கேற்றனர்.