tamilnadu

அனுமதியற்ற பேனர்கள் அகற்றம் - நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு தீவிரம்

 கோவை, செப்.16- விதிமுறையற்று வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு கோவை மாநகராட்சி அனுமதியற்ற பேனர்களை அகற்ற தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் ஆளும் அதிமுக கட்சியினர் வைத்த பேனரால் பெண் இன்ஜினியர் பலியான சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்றம் அரசு நிர்வாகத்தை கிடுக்கிபிடி போட்டுள்ளது. ஏற்கனவே கோவை அவிநாசி சாலையில் ஆளும் கட்சியினர் வைத்த பேனர் விழுந்து ரகு என்கிற இளைஞர் பலியானார். எந்த அமைப்பினர் பேனர் வைப்ப தென்றாலும் பல்வேறு விதிமுறைகளை காட்டி மறுக்கும் மாநகராட்சி, காவல்துறை ஆளும் கட்சியினர் மட்டும் எந்த விதிகளையும் பின்பற்றாமல் நினைத்த இடத்தில் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை கண்டுகொள்ளாத நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது சென்னையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் இறந்ததும், ஏற்கனவே கோவை யில் ரகு என்கிற இளைஞர் இறந்ததும் என இந்த சம்பவங் களை தொடர்ந்தே நீதிமன்றம் பேனர் விவகாரத்தை சீரிய சாக எடுத்துள்ளது. தற்போது விதிமுறைகளை மீறி பேனர் கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கோவை மாநகர காவல்துறையினர்‌ இந்த செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இரண்டு வாரத்தில்‌ மட்டும் மாநகரில்‌ அனுமதிமின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ்‌ பேனர் கள்‌ தொடர்பாக 84 வழக்குகளும், உயர்நீதிமன்ற அறிவு றுத்தலின்படி தமிழக அரசின்‌ உத்தரவிற்கு பின்பு 66 வழக்குகளும்‌ என மொத்தம்‌ 150 வழக்குகள்‌ பதிவு செய் யப்பட்டுள்ளது. மேலும்‌ இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறாக ஆபத்து ஏற்படும் வகையில்‌ பிளக்ஸ்‌ பேனர்‌ வைப்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் எனவும், இதேபோல், மாநகரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது என கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.