திருப்பூர், செப். 13- திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதி களுக்குரிய வரைவு வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட் டார். 2020 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர் பாக, வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி களை பிரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கால நிர்ணயம் செய்துள் ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக் குளம் ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் தணிக்கை செய்யப்பட்டு, 2483 வரைவுவாக்குச்சாவடிகளின் பட்டியல் அங்கீகரிக் கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி யினர் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக் காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர் அலு வலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவல கங்கள்; ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சே பணைகள் ஏதும் இருப்பின் அதனை வரும் 19ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், தாராபுரம்- சார் ஆட்சி யர், வட்டாட்சியர், காங்கயம்- வட்டாட்சியர், அவி நாசி - வட்டாட்சியர், திருப்பூர் (வடக்கு)- வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், திருப்பூர் (தெற்கு)- மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி உதவி ஆணை யர்கள், பல்லடம் - வட்டாட்சியர், உடுமலைப்பேட்டை- வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மற்றும் மடத்துக்குளம்- வட்டாட்சியரிடம் எழுத்துப்பூர்வமா கத் தெரிவிக்கலாம். மேலும், செப்.20, 21 தேதிகளில் சட்டமன்ற தொகுதி அளவில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தப்பட்டு,கருத்துக்கள் கேட்கப்படும். அதன் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிந்துரை செய்யப்படும் அறிக்கையின் பேரில், மாவட்டஅளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். எனவே, செப்.30 வரை நடை முறைப்படுத்தப்படும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத் தினை அனைத்து அரசியல் கட்சியினரும் பயன்ப டுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சரிபார்த்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது, திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, தேர்தல் வட் டாட்சியர் ச.முருகதாஸ், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.