தருமபுரி, ஜூலை 17- எட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட எட்டிப்பட்டி கிரா மத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. எட்டிப்பட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநி யோகம் இல்லை. இதேபோல், ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஓரிரு தினங்களில் அப்பகுதிக்கு தட்டுப் பாடின்றி தேவையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்ததின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர்.