tamilnadu

திறந்த இரண்டே நாளில் நியாய விலைக்கடை மூடல் - பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் புகார்

பொள்ளாச்சி, ஜூலை 13 - பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில் திறக்கப்பட்ட இரண்டே நாளில் நியாய விலைக் கடை மூடப்பட்டதால், அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன் புதூரில்  உள்ள மேட்டுத்தெருவில் 750க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இதில் 600 பேர் குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர். ஆனால் இப்பகுதி யில் நியாயவிலைக்கடை இல்லாததால் ஒரு கிமீ தொலைவு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். இதனால் இப் பகுதிக்கு நியாயவிலைக் கடை வேண்டி பல முறை குடி மைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட் சியர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று வேட்டைக்காரன்புதூர் மேட்டுத் தெருவில் கடை எண் 1.3 -ஐ மேட்டுத்தெருவிற்கு மாற்றி அமைக்கப் பட்டது. நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று கடை மேட்டுத் தெருவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலத்திலி ருந்து நியாய விலைக் கடையினை பழைய இடத்திற்கே மாற்றம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தியதாக தெரி கிறது. இதையடுத்து இனி பழைய கடைக்கே வந்து பொருட் களை வாங்கிச் செல்லுமாறு கூறி சனியன்று பாதியி லேயே கடையை ஊழியர்கள் அடைத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக் கள் திங்களன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத் திற்கு திரண்டு வந்து முறையிட்டு மனு அளித்தனர்