ஏற்காடு, செப்.28- ஏற்காடு மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளி சாரணர்கள் ராஜ்யபுரஸ்கர் விருது பெற்றுள்ளனர். ஏற்காடு வட்டம், மாரமங்கலம் பஞ்சாயத்து கொம்புத்தூக்கி கிராமத்தில் அமைந்துள்ள மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளியிலிருந்து மூன்று சாரணர்கள் ராஜ்ய புரஸ்கர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் கடந்த செப்.26ஆம் தேதியன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், சாரணர்கள் அரவிந்த் பாண்டி, தினகரன், லோகேஸ்வரி சங்கீதா ஆகியோருக்கு இவ்விருதினை வழங்கினார். இந்நிகழ்வில், தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சேலம் மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் செய லாளர் அய்யன்துரை, சாரண ஆசிரியைகள் மோகனப்பிரியா, கவுதமி ஆகியோர் கலந்து கொண்டனர். விருது பெற்ற சாரண, சாரணி யர்களுக்கு மாண்ட்போர்ட் சமுதாயப் பள்ளி தாளாளர் அருட் சகோ.டாக்டர்.ஜார்ஜ் கே ஜே மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித் தனர்.