tamilnadu

img

ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற திருப்பூர் பள்ளி மாணவர்

திருப்பூர், அக். 1 - திருப்பூர் குமரானந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.மனோ சஞ்சய்க்கு தேசிய சாரணர் இயக்கத்தின் உயரிய விருதான ராஜ்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.  பள்ளி அளவில் தேசிய சாரணர் இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களுக்கு ஆண்டு தோறும் இவ்விருது ஆளுநர் மூலம் வழங்கப்படுகி றது. மாவட்டந்தோறும் ஒரு சாரணர், சாரணியர் இதற்கு தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டு ராஜிய புரஸ்கார் விருதுக்கு குமரானந்தபுரம் பள்ளி மாணவர் மனோ சஞ்சய் பெற்றுள்ளார். இத்துடன் காங்கேயம் ஜெசீஸ் பள்ளி மாணவி பி.கே.நந்தினிக்கும் ராஜிய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பன்வாரி லால் புரோகித் இந்த விருதினை மனோ சஞ்சய், நந்தினிக்கு வழங்கினார். கல்வி அமைச்சர் செங் கோட்டையன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருது பெற்ற மாணவருக்கு குமரானந்தபுரம் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, பெற்றோர் ஆசிரி யர் கழகத்தலைவர் ராதாகிருஷ்ணன், சங்க உறுப்பி னர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரி வித்தனர். இம்மாணவரின் தந்தை ராஜேஷ் மார்க் சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.