tamilnadu

img

ரஜினியின் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டியதில்லை

முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சாடல்

கோவை, நவ.11–  தமிழகத்தில் வெற்றிடம் என எந்த அரசியல் கட்சியும் சொல்லவில்லை. நடிகர்  ரஜினி சொல்வதெல்லாம் பொருட்படுத் தப்பட வேண்டியதில்லை என தமிழக முதல் வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சாடியுள் ளார். சேலம் செல்வதற்காக தமிழக முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திங்க ளன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தி யாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது. நாடாளுமன்ற தேர் தலின்போது இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். மேலும், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடந்து முடிந்த விக்ரவாண்டி, நாங்குநேரி தேர்தலின் அடிப்படையில் அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. ரஜினி ஒரு நடிகர், அரசி யல் கட்சி தலைவரல்ல, அவர் கூறும் கருத் துகளை கேட்க தேவையில்லை. பரபரப் பிற்காக இதுபோன்ற கருத்துக்களை சொல்லி வருகின்றனர் என்றார்.